ஜெயலலிதா இமாலய தவறு செய்கிறார்: மதிமுக
தஞ்சாவூர்:
வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்வது இமாலயத் தவறாகும் என மதிமுகவின் அவைத் தலைவர் எல்.கணேசன்கூறினார்.
தஞ்சாவூரில் நிருபர்களிடம் பேசிய அவர்,
பொடா சட்டத்தை ஆதரித்த வைகோவை அதே சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. தீவிரவாதிகளுக்குஎதிரான சட்டத்தை வைகோவுக்கு எதிராக பயன்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஆர்.எஸ்.எஸ். கூட ஒரு காலத்தில் தடை செய்யப்பட்ட இயக்கமாகத் தான் இருந்தது. அதே போல விடுதலைப் புலிகளின் மீதானதடையும் கூட விரைவில் நீக்கப்படலாம்.
ஒரு ஜனநாயகத் தலைவரை பொடா சட்டத்தின் கீழ் ஜெயலலிதா கைது செய்திருப்பது இமாயலத் தவறாகும்.
மதிமுகவின் மீது ஜெயலலிதா அரசு போர்ப் பிரகடனம் செய்திருக்கிறது. இதை மதிமுக எதிர்கொள்ளும். வைகோ கைதானவுடன்50,000 பேர் போராட்டத்தில் குதிப்பார்கள்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் உதவிக்காக ஏங்க மாட்டோம். ஜெயலலிதாவின் சவாலை நாங்களே எதிர்கொள்வோம்என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications