இன்று உலக மக்கள் தொகை தினம்: உலகில் 6ல் ஒருவர் இந்தியர் !!
சென்னை:
இன்று உலக மக்கள் தொகை தினமாகும்.இதையொட்டி முதல் முறையாக நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சேலத்தில் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தஇனத்தினர் கு.க. செய்து கொள்வதில்லை. இவர்களது குடும்ப எண்ணிக்கை எப்போதும் ஒரு சின்ன ஊர் அளவுக்கு இருப்பது வழக்கம்.
ஆனால், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மிகத் தீவிரமாக செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள தமிழக நலத்துறையினர் சமீபத்தில் சேலத்தைச்சேர்ந்த நரிக்குறவப் பெண்ணாண ராதாவுக்கு குடும்பக் கட்டுபாட்டு அறுவை சிகிச்சை செய்தனர்.
ராதாவுக்கு இன்று நடந்த குடும்பக் கட்டுப்பாட்டு விழாவில் மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணனின் மனைவி கிருத்திகா பரிசுவழங்கவுள்ளார்.
ஷாக் புள்ளி விவரம்:
இந்தியாவில் இன்றைய தினப்படி மக்கள் தொகை 102.7 கோடி.
உலக மக்கள் தொகை- 607 கோடி.
உலகில் 6 பேரில் ஒருவர் இந்தியராக இருக்கிறார்.
தமிழகத்தில் மக்கள் தொகை- 6.2 கோடி
தமிழக்ததில் ஆண்டுதோறும் 11.5 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன.
அதாவது ஒன்றறை நிமிடத்துக்கு 1 குழந்தை பிறக்கிறது.












Click it and Unblock the Notifications