ஈரோட்டில் மழை வேண்டி கழுதை திருமணம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோடு அருகே மழை பெய்வதற்காக 2 கழுதைகளுக்கு பொது மக்கள் திருமணம் செய்து வைத்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு சரியாக மழை பெய்யாமல் வயல்கள் அனைத்தும் வறண்டு போயுள்ளன.

இதையடுத்து ஈரோட்டை அடுத்து உள்ள சின்னியம்பாளையம் என்ற கிராமத்தில், மழை பெய்வதற்காக கழுதைதிருமணம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி ஒரு ஆண் கழுதையையும் பெண் கழுதையையும் ஏற்பாடு செய்தனர் அந்தக் கிராம மக்கள்.

பின்னர் ஆண் கழுதைக்கு பரிவட்டம் கட்டி, பெண் கழுதைக்கு சேலை கட்டியும் பொட்டு வைத்தும் அலங்கரித்தனர்.

இதைத் தொடர்ந்து கெட்டி மேளம் முழங்க அந்த இரண்டு கழுதைகளுக்கும் திருமணம் நடத்தப்பட்டது.

இதையடுத்து விரைவில் தங்கள் ஊரில் மழை பெய்யும் என்று அந்தக் கிராமத்தினர் நம்புகின்றனர்.

இந்த கழுதைத் திருமணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் பொது மக்கள் கொண்டுவந்த தானியங்கள் மற்றும் உணவுப் பொருள்களை வைத்தே அனைவருக்கும் திருமணச் சாப்பாடும்பரிமாறப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+