வைகோவை பார்க்க பெர்னாண்டஸ் இன்று வேலூர் வருகை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோவைப் பார்ப்பதற்காகபாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று வேலூர் வருகிறார்.

தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான பெர்னாண்டஸ் இன்று காலை டெல்லியிலிருந்துவிமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் அவர் உடனடியாக வேலூருக்குப் புறப்பட்டார்.

அதன் பிறகு பகல் 11.45 மணிக்கு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோவை அவர் சந்திக்கவுள்ளார்.பின்னர் பிற்பகல் 1 மணிக்கு வேலூரில் பத்திரிக்கை நிருபர்களையும் பெர்னாண்டஸ் சந்திக்கிறார்.

பெர்னாண்டஸ் வருகையையொட்டி வேலூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவருடையவருகை குறித்து ஏற்கனவே தமிழக அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டு விட்டது.

மதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த ஒரு தலைவர் சிறையிலிருக்கும் வைகோவைசந்திக்க வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலேயே உள்ள திமுக மற்றும் பாமக போன்ற கட்சிகள் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்தும் கூடஅதன் தலைவர்கள் இதுவரை வைகோவைச் சென்று பார்க்கவில்லை.

பாஜகவின் அகில இந்திய செயலாளரான இல. கணேசன் நேற்று சிறையில் உள்ள வைகோவைச் சென்று பார்த்தார்என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+