செல்லாத ஓட்டு போட்ட 6 தமிழக எம்.எல்.ஏக்கள்
டெல்லி:
ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தின் 6 எம்.எல்.ஏக்கள் செல்லாத ஓட்டுக்களைப் போட்டுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 எம்.எல்.ஏக்களில் 233 பேர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர்.
இவர்களில் 217 பேர் டாக்டர் அப்துல் கலாமுக்கு ஆதரவாகவும் 10 பேர் கேப்டன் லட்சுமி சேகலுக்கு ஆதரவாகவும்ஓட்டுப் போட்டுள்ளனர்.
மீதமுள்ள 6 வாக்குகள் செல்லாதவையாக நேற்று வாக்கு எண்ணிக்கையின் போது அறிவிக்கப்பட்டன. இந்தவாக்குகளில் மதிப்பு 1056 ஆகும்.
இதே போல் பாண்டிச்சேரியிலும் 2 எம்.எல்.ஏக்கள் செல்லாத ஓட்டுக்களைப் போட்டுள்ளனர். அங்கு மொத்தஎம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 30.
மொத்தம் 4,050 எம்.எல்.ஏக்களும் 735 எம்.பிக்களும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர். இவர்களில் 174பேரின் (132 எம்.எல்.ஏக்கள், 42 எம்.பிக்கள்) வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
ஆந்திராவில் தான் அதிகபட்சமாக 17 பேர் செல்லாத ஓட்டுக்கள் போட்டுள்ளனர். அதே போல் பஞ்சாப்பில் 14பேரும் மத்தியப் பிரதேசத்தில் 11 பேரும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒருவரும் செல்லாத ஓட்டுக்களைப் பதிவுசெய்துள்ளனர்.