வைகோ கைதான அதிர்ச்சியில் மதிமுக பிரமுகர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்ட அதிர்ச்சியில் மயக்கமடைந்த மதிமுக பிரமுகர்பரிதாபமாக உயிரிழந்தார்.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக கடந்த 11ம் தேதி பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைதுசெய்யப்பட்டார்.
தென் சென்னை மாவட்ட பிரமுகரான அன்பு வேலன் என்பவர் வைகோ கைது செய்யப்பட்ட சம்பவத்தைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்து மயக்கம் போட்டு விழுந்தார்.
இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் அதிர்ச்சியிலிருந்து மீளாமலேயே அன்பு வேலன் பரிதாபமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications