அமெரிக்காவில் வாழும் இந்தியர்களே!

Subscribe to Oneindia Tamil

சிலிக்கன் வேலி:

அமெரிக்காவில் வாழும் பிற நாட்டினர் தங்களது முகவரி மாறியிருந்தால் அதை 10 நாட்களுக்குள் சட்டத்துறையிடம் தெரிவிக்கவேண்டும் என்ற விதி அமலாக்கப்பட உளளது.

இந்த விதி 2 மாதங்களில் அமலாகும் என்று தெரிகிறது. அமெரிக்காவில் குடியேறியுள்ள பிற நாட்டினர் மீதான தனது கெடுபிடியைஅந் நாடு அதிகப்படுத்தியுள்ளது. இந்த விதியின்படி அந்த நாட்டுக்குள் நுழையும்போது ஒருவர் கொடுத்த முகவரி பின்னர்மாறியிருந்தால் அதை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.

இதைச் செய்யத் தவறுபவர்கள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளது. முகவரி மாற்றத்தைத் தெரிவிக்காதபிற நாட்டினருக்கு 200 டாலர் அபராதம், 30 நாள் சிறைவாசம், தேவைப்பட்டால் நாட்டைவிட்டு வெளியேற்றுவது போன்றநடவடிக்கைகளை அந் நாடு எடுக்கவுள்ளது. இது கிரீன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கும் பொறுந்தும்.

இது குறித்து அந் நாட்டின் அட்டர்னி ஜெனரல் ஜான் அஸ்க்ராப்ட் கூறுகையில், இந்த நடவடிக்கை மூலம் அமெரிக்கர்அல்லாதவர்களை எளிதில் கண்காணிக்க முடியும். அமெரிக்காவின் பாதுகாப்புக்கு இது மிக அவசியமாகிறது என்றார்.

முகவரி மாறுவோர் அது குறித்துத் தெரிவிக்க வேண்டும் என்ற விதி நீண்டகாலமாகவே அமலில் உள்ளது. ஆனால், இதை யாரும்பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. இந்த விதியை அமல்படுத்துவதில் அமெரிக்க அதிகாரிகளும் அதிக அக்கறை எடுத்துக்கொண்டதில்லை. ஆனால், இப்போது இந்த விதியை தீவிரமாக அமலாக்க அந் நாடு முடிவு செய்துள்ளது.

இந்த விதி அமெரிக்காவில் வசிக்கும் 14 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிற நாட்டினருக்கும் பொறுந்தும். இப்போது அந்நாட்டில் 1.10 கோடி அன்னிய நாட்டினர் வசித்து வருகின்றனர்.

அமெரிக்கக் குடியுரிமைப் பிரிவு (Immigration and Naturalization Service -INS)இதனை அமலாக்கும்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+