நாடு முழுவதும் 3 நாள் துக்கம்
டெல்லி:
துணை ஜனாதிபதி கிருஷ்ண காந்தின் மறைவையொட்டி நாடு முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.
அவரது உடல் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மரணம் குறித்து அறிந்தவுடன் முதலில்துணைப் பிரதமர் அத்வானி விரைந்து வந்து அஞ்சலி செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் வாஜ்பாய் ஆகியோரும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலிசெலுத்தினர்.
பின்னர் அவரது உடல் மெளலானா ஆசாத் சாலையில் உள்ள துணை ஜனாதிபதியின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்குபொது மக்கள் அஞ்சலிக்காக இன்று முழுவதும் வைக்கப்பட்டிருக்கும்.
நாளை காலை நாடாளுமன்ற வளாகத்தில் அவரது உடல் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அவரது இறுதிச் சடங்குகள் நாளைடெல்லியில் நடக்கும் என்று தெரிகிறது. முழு அரசு, ராணுவ மரியாதையுடன் அவரது உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு தகனம்செய்யப்படும்.
துணை ஜனாதிபதியின் மறைவையடுத்து இன்று மத்திய அமைச்சரவை பிரதமர் வாஜ்பாயின் இல்லத்தில் அவசரமாகக் கூடுகிறது. அவரதுமறைவுக்கு அஞ்சலி செலுத்துவிட்டு 3 நாள் துக்கம் குறித்து இதில் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்படும்.
அவரது மறைவை அறிவிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கருப்பு பார்டர் கொண்ட அரசாணையைப் பிறப்பித்தது. இது மிக முக்கியத்தலைவர்களுக்கு மட்டுமே செய்யப்படும் மரியாதை ஆகும். நாடு முழுவதும் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும்என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications