ஈவ்-டீசிங் நடவடிக்கை கோரும் அலிகள்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
தங்களைக் கேலி செய்பவர்கள் மீது ஈவ்-டீசிங் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அரவாணிகள் (அலிகள்) கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மக்கள் வாழ்வுரிமை மையத்தின் சார்பில் திருச்சியில் அலிகளின் கூட்டம் நடந்தது. திருச்சி, கரூர், ஈரோடு, திண்டுக்கல்லில் இருந்துநூற்றுக்கணக்கான அலிகள் இதில் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானவை:
எங்களை கேலி செய்பவர்கள் மீது ஈவ்-டீசிங் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆண்களுக்கு, பெண்களுக்குஅறிவிக்கப்பட்டும் அரசின் திட்டங்கள் எங்களுக்கும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும், எங்களுக்கு என தனி ரேசன் கார்டுகள் வழங்கவேண்டும் ஆகியவை.
இந்த நிகழ்ச்சியையொட்டி அரவாணிகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 15 வயது முதல் 70 வயது வரையிலான அலிகள்இதில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications