தங்கம் விலை வீழ்ச்சி அடைந்தது
சென்னை:
சென்னையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து ஒரே வாரத்தில் ஒரு பவுனுக்கு ரூ.176 வரை குறைந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் சர்வதேச மார்க்கெட்டில் தங்க விலை உயர்ந்ததைத் தொடர்ந்து இந்தியாவிலும்இதன் விலை மளமளவென்று உயரத் தொடங்கியது.
சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற நகரங்களில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.4,000க்கும் மேல் இருந்தது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற-இறக்கங்கள்காணப்பட்டன.
இதையடுத்து கடந்த வார ஆரம்பத்தில் ரூ.3,888க்கு விற்கப்பட்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.3,712 வரைகுறைந்தது.
திருமணங்கள் அதிகம் நடைபெறும் ஆவணி மாதமும் நெருங்கி வந்து கொண்டிருப்பதால் தங்க விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து தங்கத்தின் விலை மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications