For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருத்துவமனையிலிருந்து "டிஸ்சார்ஜ்" ஆனார் மாறன்

By Super
Google Oneindia Tamil News

டெல்லி:
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருதய வால்வு மாற்று அறுவைச் சிசிச்சைசெய்யப்பட்ட மத்திய அமைச்சரும் திமுக தலைவர்களில் ஒருவருமான முரசொலி மாறன் இன்று சிகிச்சை முடிந்துவீடு திரும்பினார்.

கடந்த வாரம் நெஞ்சு வலி காரணமாக கடந்த 16ம் தேதி அவர் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கழகமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவருக்கு கடந்த 22ம் தேதி இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.டாக்டர்கள் வேணுகோபால், தல்வார் அடங்கிய குழு இந்த அறுவை சிகிச்சையை செய்தது.

அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது உடல் நிலை படிப்படியாகத் தேறி வந்தது.

இந்நிலையில் மாறன் நன்றாகக் குணமடைந்து விட்டதைத் தொடர்ந்து அவரை இன்று டிஸ்சார்ஜ் செய்ய டாக்டர்கள்முடிவு செய்தனர்.

அதன்படி இன்று மாறன் வீட்டுக்குக் கிளம்பினார். அவருடைய குடும்பத்தினர் அவரை வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அவர் சென்னை திரும்பி வந்து ஓய்வெடுப்பாரா அல்லது டெல்லியிலேயே ஓய்வெடுப்பாராஎன்பது குறித்து தெரியவில்லை.

கருணாநிதி சார்பாக அவருடைய மகனும் திமுக இளைஞரணித் தலைவருமான மு.க. ஸ்டாலின் அடிக்கடி டெல்லிசென்று மாறன் உடல் நிலையைக் கேட்டறிந்தார்.

முன்னதாக பிரதமர் வாஜ்பாய் சார்பில் பிரதமர் அலுவலகத்திற்கான இணை அமைச்சர் விஜய் கோயல் இன்றுகாலை மாறனைச் சந்தித்து பூங்கொத்து ஒன்றைக் கொடுத்து வாழ்த்தினார்.

--> Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X