For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸ்-தமாகா இணைப்பு விழா: சென்னை to

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காங்கிரசுடன் தமாகாவை இணைக்கும் விழாவுக்காக சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் விடப்படும்என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.

இதுகுறித்து சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

திட்டமிட்டபடி வரும் ஆகஸ்டு 14ம் தேதி மதுரையில் காங்கிரஸ்-தமாகா இணைப்பு விழா நடைபெறுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ளும் இந்த விழாவை மிகவும் பிரம்மாண்டமாகநடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

இந்த இணைப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களைக் கலந்து கொள்ளச்செய்ய வேண்டும் என்பதற்காக சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் ஒன்றுக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்டு 13ம் தேதி இந்தச் சிறப்பு ரயில் சென்னையிலிருந்து கிளம்பும்.

இந்த ரயில் தவிர தமாகாவும் தன்னுடைய தொண்டர்களை அழைத்து வருவதற்காக சிறப்பு ரயில் ஒன்றை ஏற்பாடுசெய்துள்ளது.

சத்தியமூர்த்தி பவனில் காங். தலைமையகம்:

மேலும் இணைப்பு விழாவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில்இயங்கும்.

அதன் பின்னர் யார் யாருக்கு என்னென்ன பதவி என்பதை சோனியாவே அறிவிப்பார்.

தமிழகத்தில் வறட்சி தாண்டவமாடும் நிலையில் அதற்காக டெல்லி சென்று நிதியுதவிகளைப் பெறும் முயற்சியில்இறங்காமல், ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்குத் தன்னை அழைக்காதது குறித்த விவகாரத்தை முதல்வர்ஜெயலலிதா பெரிதுபடுத்தி வருகிறார் என்றார் இளங்கோவன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X