Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக பேரணி கலவரம்: மீண்டும் சாட்சியளித்தார் முத்துக்கருப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த ஆண்டு சென்னையில் நடந்த திமுக பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை குறித்து அப்போதைய சென்னைமாநகர போலீஸ் கமிஷனரான முத்துக்கருப்பன் நேற்று விசாரணை கமிஷன் முன் சாட்சியமளித்தார்.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கடந்த ஆண்டுஆகஸ்டு 12ம் தேதி சென்னையில் அக்கட்சியினர் பேரணி நடத்தினர்.

இந்தப் பேரணியின் முடிவில் பெரும் வன்முறை ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5திமுகவினர் உயிரிழந்தனர். அப்போது பத்திரிக்கை நிருபர்களிடமும் போலீசார் கடுமையாக நடந்து கொண்டனர்.

இந்த வன்முறை குறித்து நீதிபதி பக்தவத்சலம் தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றைத் தமிழக அரசுநியமித்தது.

பேரணி நடந்த போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த முத்துக்கருப்பன் ஏற்கனவே இரண்டு முறை இந்தக்கமிஷன் முன் ஆஜராகி சாட்சியமளித்தார்.

இந்நிலையில் நேற்றும் அவர் மூன்றாவது முறையாக விசாரணைக் கமிஷனின் முன் தோன்றி சுமார் இரண்டு மணிநேரம் வரை சாட்சியமளித்தார்.

திமுக வழக்கறிஞரான பாலகுருவும் முத்துக்கருப்பனிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது அவர் கேட்டபல கேள்விகளுக்கு போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சவுந்தரராஜன் ஆட்சேபம் தெரிவித்தார்.

இதனால் இரண்டு வழக்கறிஞர்களும் அடிக்கடி மோதிக் கொண்டனர்.

இந்நிலையில் முத்துக்கருப்பன் இன்றும் விசாரணைக் கமிஷன் முன்பாகத் தோன்றி சாட்சியமளிப்பார் என்றுதெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+