வைகோ- பெர்னாண்டஸ் சந்திப்பு: மக்களவையில் பெரும் அமளி
டெல்லி:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பாதுகாப்புத்துறைஅமைச்சர் எப்படி சிறையில் சென்று சந்திக்கலாம் என்று கேட்டு மக்களவையில் எதிர்க் கட்சிகள் கடும் அமளியில்ஈடுபட்டன.
அதிமுக எம்.பி. பி.எச். பாண்டியன் மிகக் கடுமையான வார்த்தைகளால் இந்தச் சந்திப்பை விமர்சித்தார். அவருக்குபா.ஜ.க. மற்றும் மதிமுக உறுப்பினர்கள் கோபமாக பதில் தந்தனர். இதையடுத்து பாண்டியனின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ள வைகோவை மத்திய அமைச்சரவையில் உள்ள பெர்னாண்டஸ் எப்படிப் போய் பார்க்கலாம்என்று கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு குரல் எழுப்பின.
காங்கிரஸ் கட்சியின் எம்.பியும் முன்னாள் சபாநாயகருமான சிவராஜ் பாட்டீல் பேசுகையில்,
இலங்கையில் விடுதலைப் புலிகளால் இந்திய ராணுவத்தினர் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். அந்த ராணுவத்துக்குஅமைச்சராக உள்ள பெர்னாண்டஸ் இப்போது புலிகளை ஆதரித்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ள ஒருவரை(வைகோ) சந்தித்துப் பேசியிருக்கிறார். இது ராணுவத்தின் முதுகில் அதன் அமைச்சரே குத்துவதற்குச் சமம். அது மட்டுமல்ல புலிகளால் நமதுநாட்டின் பிரதமரும் படுகொலை செய்யப்பட்டார்.
அப்படிப்பட்ட புலிகளை ஆதரிக்கும் வைகோவை ராணுவ அமைச்சரே போய் சந்திப்பது நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்றார் பாட்டீல்.
இதற்கு மதிமுக உறுப்பினர்களும் பா.ஜ.கவினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக்கொண்டனர். காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஆதரவாக அதிமுகவினர் குரல் எழுப்பினர்.
இதையடுத்து அவையில் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
அப்போது எழுந்த துணைப் பிரதமர் அத்வானி, சிறையில் இருக்கும் ஒருவரை அமைச்சர் சென்று சந்திக்கக் கூடாதுஎன்று எந்தச் சட்டத்திலும் எழுதப்பட்டிருக்கவில்லை. சிறையில் இருக்கும் எம்.பி. ஒருவரை அவருடைய சக எம்.பி.சென்று பார்ப்பதற்கு முழு உரிமையும் உண்டு. தனது தனிப்பட்ட நட்பு காரணமாக பெர்னாண்டஸ் வைகோவைசந்தித்துள்ளார். இதன்மூலம் யாருக்கும் பெர்னாண்டஸ் துரோகம் செய்துவிடவில்லை என்றார் அத்வானி.
அதே நேரத்தில் வைகோ கைது விஷயத்தில் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி கூறியது. அந்தக் கட்சியின் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கூறுகையில், இந்தச் சட்டத்தில்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றார்.
இதற்கு அத்வானி பதிலளித்த போது கூறுகையில்,
வைகோ கைது செய்யப்பட்டுள்ளது முழுக்க முழுக்க தமிழக அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனை. இதில் மத்திய அரசுதலையிட முடியாது. தலையிடவும் செய்யாது. ஜனாதிபதி தேர்தலில் வைகோ வந்து வாக்களிக்க அனுமதிஅளிக்கப்பட்டது.
அது போல் தன்னுடைய கைதை எதிர்த்து வழக்கு தொடர பொடா சட்டத்திலேயே இடம் உள்ளது என்றார்.
இந்த விவகாரத்தில் அதிமுக எம்.பியான பி.எச். பாண்டியன் பேசியவை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications