காஞ்சி அருகே பஸ்-லாரி மோதல்: 3 பேர் பலி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே அரசு பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டதில் பஸ் டிரைவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து ஆந்திராவின் சித்தூர் நோக்கி இன்று காலை ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.
எதிர்த் திசையில் பெங்களூரிலிருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.
காஞ்சிபுரம் அருகே இந்த பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.
இவ்விபத்தில் பஸ்சின் டிரைவர் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
காயமடைந்த 25 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் போலீசார் இவ்விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக சென்னை-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் இன்று காலை சுமார் மூன்று மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.