காஞ்சிபுரத்தில் 2 மாதங்களில் புதிய ரயில் நிலையம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் ரயில் நிலையம் இன்னும் 2 மாதங்களில் செயல்படத் தொடங்கும் என்றுமத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கூறினார்.ஞணூ>
காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில் நிலையப் பணிகளை அவர் பார்வையிட்டார். பின்னர்செய்தியாளர்களிடம் கூறுகையில்,
செங்கல்பட்டு ரயில் நிலையம் மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை வசூல் செய்து வருகிறது. எனவே அந்த ரயில்நிலையத்தை மேலும் லாபகரமானதாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மதுரை, திருச்சி செல்லும் வைகை மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்றுசெல்ல ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் செங்கல்பட்டு நிலையத்திற்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.
எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்களுக்கு வசதியாக ஜன்னலோரம்தொட்டில்கள் அமைக்கப்படும் என்றார் மூர்த்தி.
முன்னதாக சென்னை-விழுப்புரம் புதிய ரயில் தொடக்க நகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், இந்த ரயில் மதுரைவரை பின்னர் நீட்டிக்கப்படும். அதேபோல, ராமேஸ்வரத்திலிருந்து காசி வரை ஒரு புதிய ரயில் இயக்கப்படும்என்றார்.












Click it and Unblock the Notifications