நாளை மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: 7 புதுமுகங்கள்
டெல்லி:
நாளை விரிவாக்கம் செய்யப்படவுள்ள மத்திய அமைச்சரவையில் 7 புதிய முகங்களும் இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை 1ம் தேதி மத்திய அமைச்சரவையில் பெரிய அளவிலான மாறுதல்கள் இருந்தன. கேபினட்லெவலில் மாறுதல்கள் செய்யப்பட்டன. மேலும் பல அமைச்சர்களும் புதிதாகச் சேர்க்கப்பட்டனர்.
இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் நாளை மீண்டும் அமைச்சரவையில்மாறுதல்கள் செய்யப்படவுள்ளன. ஆனால் இம்முறை பெரிய மாறுதல்கள் எதுவும் இருக்காது எனத் தெரிகிறது.
சிவ சேனா கட்சியைச் சேர்ந்த சுரேஷ் பிரபு சமீபத்தில் தான் தன்னுடைய மின்சாரத் துறை அமைச்சர் பதவியைராஜினாமா செய்தார். அக்கட்சியின் தலைவர் பால் தாக்கரேயின் உத்தரவுப்படி அவர் ராஜினாமா செய்துள்ளார்.இந்த ராஜினாமாவை பிரதமர் வாஜ்பாயும் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமும் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் நிதித் துறை இணை அமைச்சராகத் தற்போது உள்ள ஆனந்த் கீத்தேவுக்கு சுரேஷ் பிரபு வகித்து வந்தமின்சாரத் துறையின் கேபினட் அமைச்சர் பதவு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் தற்போது மத்திய அமைச்சரவையில் உள்ள வசுந்தரா ராஜே பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்சிப்பணிக்கு அனுப்பப்படுகிறார். அவர் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைவராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களைத் தவிர மேலும் 7 பேர் மத்திய அமைச்சரவையில் நாளை புதிதாகச் சேரப் போவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications