ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்: மாணவர் போராட்டம் தொடர்கிறது
சென்னை:
அரசுக் கல்லூரி ஆசியர்கள் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டிருப்பதால் திங்கள்கிழமை முதல்வேலைக்குத் திரும்புகிறார்கள்.
ஆனால் அரசுக் கல்லூகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதைக் கண்டித்து மாணவ, மாணவியர் தொடர்ந்து ஸ்டிரைக்கில்ஈடுபடவுள்ளனர்.
அரசுக் கல்லூகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெவித்து கடந்த சில நாட்களாக அரசுக் கல்லூரிஆசியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டு வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் ஸ்டிரைக்கில் குதித்தனர்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா ஆசியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதில் பிரச்சினை குறித்து ஆராய குழுஅமைப்பதாக முல்வர் உறுதியளித்தார். இதையடுத்து ஆசியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இன்று முதல்ஆசியர்கள் பணிக்குத் திரும்புகிறார்கள்.
மாணவர் போராட்டம் தொடரும்:
இருப்பினும், மாணவர்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக தெவித்துள்ளனர். அரசின் முடிவால் தங்களுக்குத்தான்அதிக பாதிப்பு என்று கூறும் மாணவர்கள் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைக்கும் திட்டத்தை வாபஸ் பெறக் கோரிதொடர்ந்து ஸ்டிரைக் செய்யப் போவதாக கூறியுள்ளனர்.
ஆசிரியரக் சங்கத்தினரை அழைத்துப் பேசிய ஜெயலலிதா, மாணவர் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.அவர்களது கோரிக்கையை அரசு காதில் வாங்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.