பாண்டிச்சேரி: த.மா.காவை தொடர்ந்து நடத்துவேன்- தேனீ ஜெயக்குமார்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி தமிழ் மாநல காங்கிரஸ் தலைவராக தேனீ ஜெயக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்தன. தமிழகத்தில் இதை எதிர்த்து ஐந்துதமாகா எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர், ஐவரும் தனித்து செயல்பட்டு வருகின்றனர்.
பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில் தமாகா, காங்கிரஸில் இணையவில்லை. மாறாக தமாகாவின் ஒரேஎம்.எல்.ஏவான தேனி ஜெயக்குமார், தான் இன்னும் தமாகாவிலேயே இருப்பதாகவும், தமாகா என்ற கட்சியைதொடர்ந்து நடத்தப் போவதாகவும் அறிவித்திருந்தார்.
இந் நிலையில் பாண்டிச்சேரி தமாகா செயற்குழுக் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் மாநிலத் தலைவராக தேனிஜெயக்குமார் தேர்வு செய்யப்பட்டார். மூப்பனார் பாதையில்தொடர்ந்து தமாகா செயல்படும் என்று பின்னர்ஜெயக்குமார் நிருபர்களிடம் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரான தேனி ஜெயக்குமார், ரங்கசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சர்பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து வந்தார்.
இந் நிலையில், தமாகா, காங்கிரஸுடன் இணைந்ததை எதிர்த்து தனித்து செயல்பட முடிவு செய்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->