பிகார்: ஆற்றுக்குள் ரயில் கவிழ்ந்து 80 பேர் பலி
ரபிகஞ்ச் (பிகார்):
ஹவுராவிலிருந்து டெல்லி சென்று கொண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு பிகார் மாநிலத்தில்உள்ள ஒரு ஆற்றில் கவிழ்ந்ததில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைஅதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கடந்த திங்கள்கிழமை இரவு சுமார் 10.40 மணிக்கு நிகழ்ந்த இந்த மோசமான விபத்திற்கு நாசவேலை தான் காரணம்என்று மத்திய ரயில்வே அமைச்சர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
இந்த ராஜதானி எக்ஸ்பிரஸ்சின் சுமார் 13 பெட்டிகள் ஆற்றுக்குள் மூழ்கி விட்டன. இதுவரை சுமார் 80 உடல்கள்மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் 36 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்னும் பல பயணிகள் ஆற்றுக்குள் மூழ்கிக் கிடக்கும் பெட்டிகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர். பலர் ஆற்றோடுஅடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.
இதற்கிடையே இதுவரை சுமார் 93 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சியால்தாஎக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தனர்.
நடந்த விபத்து குறித்து உயிர் பிழைத்த ஒவ்வொரு பயணியும் தான் தப்பித்தது குறித்து அச்சத்துடனும்ஆச்சரியத்துடனும் நிருபர்களிடம் விளக்கினர்.
இதே போல் மீட்கப்பட்ட பயணிகளில் பலர் கொல்கத்தா ரயில் நிலையத்திற்கும் வந்து சேர்ந்துள்ளனர்.
இதற்கிடையே இந்த பயங்கரமான விபத்து குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-->
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications