For Daily Alerts
Just In
மேட்டூர் அணைக்கு மிரட்டலா?
சென்னை:
மேட்டூர் அணைக்கு எந்தவிதமான மிரட்டலும் இல்லை என்று சேலம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்மாகாளி கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மேட்டூர் அணைக்கு யாரிடமிருந்தும், எந்த விதத்திலும் மிரட்டல் வரவில்லை. அங்கு கொடுக்கப்பட்டுள்ளபாதுகாப்பு, தண்ணீர் திறக்கப்படும் காலங்களில் கொடுக்கப்படும் வழக்கமான ஒன்று தான்.
சுமார் 20 பேர் கொண்டு ஆயுதப் படை போலீஸார் தற்போது அணைக்குக் காவலாக உள்ளனர். மேட்டூர் டி.எஸ்.பி.தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார் மாகாளி.
-->
Comments
Story first published: Thursday, September 12, 2002, 5:30 [IST]