For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரள அரசு பஸ் நெல்லையில் பறிமுதல்

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

சாலை விபத்தில் இறந்தவரின் மனைவிக்கு கோர்ட் உத்தரவுப்படி நஷ்ட ஈடு வழங்காததால், கேரள மாநில அரசுப்போக்குவரத்துக் கழக பேருந்து திருநெல்வேலியில் பறிமுதல் செய்யப்பட்டது.

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் கடந்த 1998ம் ஆண்டு வேனில் சென்று கொண்டிருந்தபோது,கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று அந்த வேன் மீது மோதியது.

இவ்விபத்தில் லோகநாதன் பலியானார். இதைத் தொடர்ந்து அவரது மனைவி மரிய புஷ்பம் திருநெல்வேலிகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கில், வேன் உரிமையாளரும், கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.2 லட்சத்து 75,000 நஷ்ட ஈடுவழங்குமாறு கோர்ட் உத்தரவிட்டது. இதில் பாதித் தொகையை கேரள போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும்.ஆனால் இதுவரை அது வழங்கவில்லை.

இதையடுத்து மரிய புஷ்பம் மீண்டும் கோர்ட்டை அணுகினார். விசாரித்த நீதிபதி, கேரள அரசுப் போக்குவரத்துக்கழகம் உடனடியாக ரூ.1 லட்சத்து 84,000 ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் அதுவரை கேரளபோக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பஸ்சை பறிமுதல் செய்யுமாறும் உத்தரவிட்டார்.

இதையடுத்து கோர்ட் ஊழியர்கள், போலீஸாருடன் சென்று திருநெல்வேலி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தகேரள போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான ஒரு பஸ்சை பறிமுதல் செய்து கோர்ட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X