இளங்கோவனுக்கு ஜெயலலிதா வக்கீல் நோட்டீஸ்
சென்னை:
ஜெயலலிதாவின் சொந்த வாழ்க்கையைப் பற்றி பேசுவேன் என்று கூறிய காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு வக்கீல் நோட்டீஸ்அனுப்பியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஆண்டோனியோ மெய்னோ என்று சொந்தப் பெயரை சொல்லி அழைத்து மிகக் கடுமையாகவிமர்சித்தார் ஜெயலலிதா. இதையடுத்து ஜெயலலிதவை கோமவள்ளி என்ற அம்முவே என்று அழைத்து பதிலடி தந்தார் இளங்கோவன்.
சோனியாவை விமர்சிப்பதை நிறுத்தாவிட்டால் ஜெயலலிதாவின் அந்தரங்க வாழ்க்கை பற்றி பல விவரங்கள் வெளிவரும் என்றும்எச்சரித்திருந்தார்.
இதையடுத்து அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஜெயலலிதா. அதிமுக எம்.பியும் வழக்கறிஞருமான ஜோதி மூலமாக இந்தநோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் உங்கள் மீது ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று இளங்கோவனுக்கு ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இத் தகவலை இளங்கோவனே இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், ஜெயலலிதாவுக்கு பதில் அனுப்புவது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.ஜெயலலிதாவை சட்டரீதியில் நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயார்.
காவிரியில் தண்ணீர் பெற்றுத் தர முடியாவிட்டால் பேசாமல் பதவி விலகி விடுவது தான் ஜெயலலிதாவுக்கு நல்லது.
ஜெயலலிதாவின் தன்னிச்சையான போக்குக் காரணமாகவே காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்காமல் போய்விட்டது.
கர்நாடகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளின் கருத்தையும் அம் மாநில முதல்வர் கேட்கிறார். ஆனால் இங்கோ, எதிர்க்கட்சிகள் ஆலோசனைகூறினால் அதை ஜெயலலிதா ஏற்றுக் கொள்வதில்லை.
இனிமேலாவது எதிர்க்கட்சிகளை பழி வாங்குவதை நிறுத்தி விட்டு அவர்களை மதித்து செயல்படுமாறு ஜெயலலிதாவைக் கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.
-->












Click it and Unblock the Notifications