விநாயகர் ஊர்வலதத்தில் மோதல்: 2 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் சிவசேனை அமைப்பினர் நடத்திய விநாயகர் சிலை ஊர்வலத்தில் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தினர்.இதில் 2 சிவசேனை தொண்டர்கள் படுகாயம் அடைந்தனர்.
திருச்சி நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுகரைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
சிவசேனையின் இளைஞர் அணி சார்பில் பெரிய விநாயர் கோவில் பகுதியில் இருந்து ஊர்வலம் கிளம்பியது.
ஊர்வலம் சின்ன செட்டி தெருவை அடைந்தபோது, அங்கு ஒரு கும்பல் சோடா பாட்டில்களை வீசியும், கத்தி,கம்புகளால் தாக்கியும் ரகளை செய்தது.
இதில் ராம், ராஜேந்திரன் ஆகிய இருவர் படுகாயம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications