கல்யாணி, சுகுமாறன் காட்டுக்குள் செல்கின்றனர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

நாகப்பாவை மீட்க வீரப்பனைச் சந்தித்துப் பேச பாண்டிச்சேரியைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர்கல்யாணியும், சுகுமாறனும் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இது குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே இன்று நிருபர்களிடம் கூறுகையில்,

வீரப்பனுடன் பேச காட்டுக்குச் செல்ல பேராசிரியர் கல்யாணியும், சுகுமாறனும் தாமாகவே முன் வந்துள்ளனர். அவர்களை காட்டுக்குச்செல்ல அனுமதிப்போம். ஆனால், அவர்கள் அரசுத் தூதுவர்களாக செல்ல மாட்டார்கள். சுய விருப்பத்துடன் தான் செல்கின்றனர்.

அவர்கள் இந்த உதவியைச் செய்ய முன் வந்திருப்பதை கர்நாடகம் வரவேற்கிறது. அவர்களது சேவையை நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்.

அரசுத் தூதுவர்களாகத் தான் செல்வோம் என்று அவர்கள் நிபந்தனை ஏதும் விதிக்கவில்லை. அதே நேரத்தில் தாங்கள் காட்டுக்குள்செல்லும்போது கர்நாடக அதிரடிப்படை தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும் தங்களைத் தொடரக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

நாகப்பாவின் உயிரைக் கருத்தில் கொண்டு இதை ஏற்றுக் கொண்டு விட்டோம். அவர்கள் காட்டுக்குள் போகும்போது தொல்லை தரவேண்டாம் என்று அதிரடிப்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வீரப்பனின் கோரிக்கைகள் குறித்து இந்த முறை எந்த உத்தரவாதமும் தரப்பட மாட்டாது. இந்த விஷயத்தில் தமிழக அரசுடன் பேசித் தான்எதையும் செய்ய முடியும் என்றார் கார்கே.

கர்நாடக அரசு கேட்டுக் கொண்டால் தான் காட்டுக்குள் செல்வோம் என சுகுமாறனும் கல்யாணியும் கூறி வருகின்றனர். இந் நிலையில்அவர்கள் சுய விருப்பத்துடன் வேண்டுமானால் போகலாம் என்று கர்நாடகம் கூறியுள்ளது தான் இடிக்கிறது.

அப்படியே கல்யாணியும் சுகுமாறனும் தாங்களாக முன் வந்து காட்டுக்குள் சென்றாலும் அதை அரசுத் தூதுவர்களாக வந்தால் தான்சந்திப்பேன் என்று வீரப்பன் கூறிவிட்டால் இந்த முயற்சி தோல்வியடைய வாய்ப்புள்ளது.

தமிழகம் தூதரை அனுப்பாது- ஜெ.

இதற்கிடையே தமிழகத்தின் சார்பில் வீரப்பனிடம் தூதர்களை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாகூறினார்.

சென்னையில் இன்று நிருபர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,

வீரப்பனிடம் தூது அனுப்புவது குறித்து கர்நாடக அரசிடமிருந்து தமிழக அரசுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான தகவலும்வரவில்லை.

வீரப்பன் இன்னும் கர்நாடக எல்லைக்குள் தான் இருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும் தமிழக எல்லைக்குள் அவன் வருகிறானா என்பதைதமிழக அதிரடிப்படையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

வீரப்பன் வேட்டையை நிறுத்தும் எண்ணம் தமிழகத்திற்கு இல்லை என்றார் ஜெயலலிதா.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+