நாகர்கோவிலில் வெடிகுண்டு வீச்சு
நாகர்கோவில்:
நாகர்கோவில் பஸ் நிலையத்தில் இன்று காலை ஒரு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவிலில் உள்ள வடசேரி பஸ் நிலையத்தில் இன்று காலை திருவனந்தபுரத்திலிருந்து ஒரு பஸ் வந்துசேர்ந்தது.
அந்த பஸ் வந்து சேர்ந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே அதன் அருகே ஒரு நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது.உடனே பெரும் சத்தத்துடன் அந்தக் குண்டு தரையில் விழுந்து வெடித்தது.
இதையடுத்து பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் அனைவரும்சிதறி ஓடத் தொடங்கினர்.
ஆனால் இந்தக் குண்டு வீச்சில் யாரும் காயமடையவில்லை. மேலும் பஸ்சுக்கோ அல்லது வேறு எந்தப்பொருளுக்குமோ எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை. குண்டு வீசப்பட்ட இடத்தில் தரையில் ஒரு சிறிய பள்ளம்மட்டும் ஏற்பட்டுள்ளது.
தகவல் கிடைத்ததும் வெடிகுண்டு நிபுணர்களுடன் நாகர்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுவிசாரணை நடத்தினர்.
அந்த வெடிகுண்டை யார், எதற்காக வீசினார்கள் என்பது குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. இது தொடர்பாகபோலீசார் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications