தீவிபத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள கோவிந்தப்பன் நாயக்கன் தெருவில் சமீபத்தில் வேதிப்பொருள்கிட்டங்கியில் தீவிபத்து ஏற்பட்டது.
அப்போது தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஆறுமுகம் என்ற தீயணைப்பு வீரர் படுகாயமடைந்தார்.அவரது தோல் முழுவதும் எரிந்து விட்டது.
அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.
-->












Click it and Unblock the Notifications