கர்நாடகத்துக்கு எதிராக அவமதிப்பு வழக்கு: தமிழகம் தொடர்ந்தது
சென்னை:
தமிழகத்துத் தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்திவிட்ட கர்நாடக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைஎடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு தாக்கல் செய்ததது.
ஒரு விவசாயியின் சாவை அடுத்து கபினி அணைக்கட்டுப் பகுதியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும்இனியும் தமிழகத்துக்குத் தண்ணீர் விட்டால் சட்டம்-ஒழுஙகு முழு அளவில் பாதிக்கப்படும் எனவும் கர்நாடகம்கூறியுள்ளது. இந்தக் காரணத்தைக் கூறி தமிழகத்துக்குத் தண்ணீர் தருவதை நிறுத்தியுள்ளது.
இதன்மூலம் தமிழகத்துக்குத் தண்ணீர் விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடகம் மீறியுள்ளது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளதுதமிழகம்.
இதில் கர்நாடக தலைமைச் செயலாளர் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட முடியாது என்று வெளிப்படையாகவே கூறியுள்ள கர்நாடக அரசை உடனேடிஸ்மிஸ் செய்ய வேண்டும் என இந்த வழக்கு விசாரணையின்போது தமிழகம் கோரும் என்று தெரிகிறது.
சட்டம்-ஒழுங்கைக் கட்டுப்படுத்த முடியாத அரசை 356வது பிரிவைப் பயன்படுத்தி டிஸ்மிஸ் செய்ய வேண்டும்என்று நேற்றே ஜெயலலிதா கூறியிருந்தார்.
-->












Click it and Unblock the Notifications