ராணுவத்திடம் திருடி வீரப்பனுக்கு ஏ.கே.47 கொடுத்த முன்னாள் ராணுவ வீரர்
கோயம்புத்தூர்:
ராணுவத்தில் பணிபுரிந்த போது ஒரு ஏ.கே.47 துப்பாக்கியைத் திருடி, பின்னர் அதை சந்தனக் கடத்தல் வீரப்பனுக்குவிற்றதாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
ஏ.கே.47 துப்பாக்கியை வீரப்பனிடம் விற்றது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரரான பாண்டுரங்கன் என்பவர்கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த 19ம் தேதி தட்ஸ்தமிழ்.காம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், ராணுவத்தில் பணிபுரிந்த போது அவர் அந்தத் துப்பாக்கியைத் திருடி தன் வீட்டில் பதுக்கிவைத்திருந்து, பின்னர் அதை வீரப்பனுக்கு விற்றதாக அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 1965ம் ஆண்டு பாண்டுரங்கன் ராணுவத்தில் சேர்ந்தார். பின்னர் 1971ம் ஆண்டில் வங்கதேசத்துடன் போர்நடந்த போது துப்பாக்கிகளைச் சுத்தம் செய்யும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அப்போது அவர் ஒரு ஏ.கே.47 துப்பாக்கியைத் திருடிக் கொண்டு வந்து தன்னுடைய வீட்டில் பதுக்கி வைத்தார்.
பின்னர் கடந்த 1989ல் அவர் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று சொந்த ஊரான பெரம்பலூருக்கு அருகே உள்ளசெந்துறைக்குத் திரும்பினார். அங்கு ஒரு பட்டறை அமைத்து தொழில் செய்து வந்தார்.
அவரிடம் ராஜு என்பவன் வேலைக்குச் சேர்ந்தான். இவனுக்கும் தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்ததீவிரவாதிகளுக்கும் ஏற்கனவே தொடர்பு உண்டு.
இதையடுத்து செந்தில்குமார், இளவரசன், அறிவழகன் ஆகிய தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்தவர்களுக்கும்பாண்டுரங்கனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது.
இந்தச் சமயத்தில் தான் வீரப்பனுக்கு ஏ.கே.47 துப்பாக்கி தேவைப்பட்டுள்ளது. அதன்படி வீரபாண்டியன் என்றதமிழர் விடுதலைப் படை தீவிரவாதி மூலம் அந்தத் துப்பாக்கியை வீரப்பனுக்கு அனுப்பி வைத்தார் பாண்டுரங்கன்.
இதற்காக பாண்டுரங்கனுக்கு ஏராளமான பணம் கொடுத்த வீரப்பன் தற்போது அந்தத் துப்பாக்கியைத் தான்எப்போதும் தோளில் போட்டுக் கொண்டு காட்டுக்குள் சுற்றி வருகிறான்.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட அறிவழகன், வீரபாண்டியன், செந்தில்குமார் ஆகியோர் அளித்த தகவல்களின்அடிப்படையில் தான் பாண்டுரங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாண்டுரங்கனிடமிருந்து ஒரு சிறுத்தைப் புலியின் தோலும் கைப்பற்றப்பட்டது. அசாம் காட்டுப் பகுதிகளில் உள்ளஆதிவாசிகளிடமிருந்து இந்தத் தோலைப் பெற்றதாக பாண்டுரங்கன் கூறினார்.
இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் நீதிமன்ற நீதிபதி ஏ.கே. சுப்பிரமணியம் முன்னிலையில் பாண்டுரங்கன்ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து பாண்டுரங்கன் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-->
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications