சென்னையில் ஸ்டிக்கர் நம்பர் ஒட்டிய ஆட்டோக்கள் பறிமுதல்
சென்னை:
சென்னை நகரில் ஸ்டிக்கர் நம்பர் பிளேட்டுகளை பொருத்தியிருந்த ஆட்டோக்களை நேற்று இரவு போலீஸார்அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
ஸ்டிக்கர் நம்பர் பிளேட்டுகளை மாற்றி, பெயின்ட் அடிக்கப்பட்ட நம்பர் பிளேட்டுகள்தான் வாகனத்தில் பொருத்தவேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி பலரும் வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளை மாற்றினர். மாற்றி முடித்த பிறகு மெதுவாக மாற்றினால்போதும், மாற்றாத வாகனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று காவல்துறைஅறிவித்திருந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் ஸ்டிக்கரில் நம்பர் பிளேட் அமைத்திருந்த ஆட்டோக்கள்மீது போலீஸார் திடீர் நடவடிக்கை எடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
பாரிமுனை, சென்டிரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், அண்ணா சாலை, சைதாப்பேட்டை உள்ளிட்டமுக்கிய இடங்களில் ஸ்டிக்கர் பொருத்தப்பட்டிருந்த ஆட்டோக்களை வளைத்துப் பிடித்து போலீசார் பறிமுதல்செய்தனர்.
இதனால் ஆட்டோ டிரைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
மேலும் சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில இரவு நேர ரயில்களில் வந்த பயணிகள், ஆட்டோக்கள்கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
-->












Click it and Unblock the Notifications