வறண்டு கொண்டிருக்கும் வைகை, பெரியார் அணைகள்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
வைகை மற்றும் பெரியார் அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. கிட்டத்தட்ட வறண்டு போகும்நிலைக்கு இரு அணைகளும் தள்ளப்பட்டுள்ளன.
மதுரை, தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்குஇந்த இரு அணைகள் மட்டுமே ஒரே வடிகாலாக உள்ளன.
ஆனால் இந்த ஆண்டு மழை சரிவரப் பெய்யாத காரணத்தால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் வெகுவாகக்குறைந்துவிட்டது.
இதனால் வைகை அணையும் பெரியார் அணையும் வறண்டு கொண்டே இருக்கின்றன.
பெரியார் அணையின் நீர்மட்டம் 114.30 அடியாக உள்ளது. அணைக்கு ஐந்து கன அடி நீர் மட்டுமே வந்துகொண்டுள்ளது. அணையிலிருந்து 200 கன அடி நீர் வெளியேறிக் கொண்டுள்ளது.
அதேபோல வைகை அணையின் நீர்மட்டம் 35.80 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து சுத்தமாக நின்றுவிட்டது.
-->












Click it and Unblock the Notifications