திருச்சி துணைப் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்ட்
திருச்சி:
திருச்சி பத்திரப் பதிவு அலுவலகத் துணைப் பதிவாளரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நடத்திய அதிரடிசோதனையில் 120 பவுன் தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
திருச்சி பத்திரப் பதிவுத்துறையில் நிர்வாக துணைப் பதிவாளராக இருக்கும் ஜானகிராமன் வருமானத்துக்குஅதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாகப் பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து ஜானகிராமன் மற்றும் அவருடைய உறவினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்தசனிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
தாத்தையங்கார்பேட்டையில் உள்ள அவருடைய வீடு, பெரம்பலூரில் உள்ள அவருடைய மைத்துனர் வீடு மற்றும்குரும்பலூரில் உள்ள அவருடைய மாமனார் வீடு ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையின் போது 120 பவுன் தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
-->












Click it and Unblock the Notifications