மயிலாடுதுறை கோர்ட்டில் வைகோ நாளை மீண்டும் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாளை (செவ்வாய்க்கிழமை)மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார்.
கடந்த 1984ம் ஆண்டு திமுக மற்றும் அதிமுக தொண்டர்களுக்கிடையே பெரும் மோதல் ஏற்பட்டது. அப்போதுஅதிமுக தொண்டர்களைத் தாக்கியதாக வைகோ மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக வேலூர் மத்திய சிறையிலிருந்து வைகோ செவ்வாய்க்கிழமைமயிலாடுதுறைக்குக் கொண்டு செல்லப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
சென்னையில் வெளியிடப்பட்ட மதிமுக செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வழக்கு தொடர்பாக கடந்த வாரமும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வைகோ ஆஜரானார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications