ஆத்தூர் வெடிவிபத்து ஆராயி நீதிமன்றத்தில் சரணடைந்தார்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
21 பலியாகக் காரணமாக இருந்த ஆத்தூரில் வெடிவிபத்தில் முக்கியக் குற்றவாளியான ஆராயி என்ற பெண் இன்று நீதிமன்றத்தில்சரணடைந்தார்.
இவரது வீட்டில் தான் அந்த வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடந்த 16ம் தேதி இரவில் நடந்த வெடி விபத்தில் 25 வீடுகள்இடிந்தன. இதையடுத்து ஆராயி தலைமறைவாகிவிட்டார்.
அவரைப் பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர் பாண்டிச்சேரியில் இருப்பதாகக் கருதப்பட்டு அங்கும் தேடுதல்வேட்டை நடந்து வந்தது.
இந் நிலையில் ஈரோடு மாஜிஸ்திரேட் 3வது நீதிமன்றத்தில் நீதிபதி பரிமளா முன் இன்று ஆராயி (வயது 40) சரணடைந்தார்.இதையடுத்து ஆராயியை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அவரை 26ம் தேதி ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் போலீசாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
-->












Click it and Unblock the Notifications