இலவச மின்சாரம் ரத்து ஆகாது: அரசு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லைஎன்று மாநில மின்துறை அமைச்சர் நைனார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக நேற்று செய்தி பரவியது.இதற்கு நைனார் நாகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம்பேசுகையில்,

இந்த செய்தியில் உண்மையில்லை. அம்மாதிரியான திட்டம் தமிழக அரசிடம் இல்லை.

தமிழகத்தில் தற்போது 15 லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களில்ஒன்றரை லட்சம் விவசாயிகள் ஒரு குதிரை சக்தி திறன் மின்சாரத்திற்கு ஆண்டுக்கு ரூ.250 வீதம் கட்டி வருகிறார்கள்.

இதுபோக 185 விவசாய கூட்டுறவு சங்கங்கள் அரசிடம் பணம் கட்டி மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.இவர்களுக்கு யூனிட்டுக்கு ரூ.3.25 வசூலிக்கப்படுகிறது.

இந்த கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், ஏற்கனவே ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு வசூலிக்கப்படும்மின் கட்டணமே தங்களிடம் வசூலிக்கப்பட வேண்டும் என்று கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்துஅரசு இவர்களுக்கு வழங்கும் மின்சாரக் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.2.25 ஆகக் குறைத்துள்ளது.

இந்தத் தொகையை பல பேர் இன்னும் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். இந்த நிலுவைத் தொகையைத்தான் கட்டுமாறு கோரி விவசாயிகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியது.

மற்றபடி இலவச மின்சாரத்தைப் பயன்படுத்தி வரும் விவசாயிகள் அனைவருக்கும் பணம் செலுத்தக் கூறிநோட்டீஸ் அனுப்பவில்லை என்றார் நைனார் நாகேந்திரன்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+