நடு ரோட்டில் தீக்குளித்த பெண்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நடு ரோட்டில் தீக்குளித்த பெண் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் அருணாச்சலத்தின் மனைவி காந்திமதி. இவர் நுங்கம்பாக்கம் வில்லேஜ்ரோட்டுக்கு நேற்று காலை வந்தார்.
பின்னர் திடீரென்று கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை உடல் மீது ஊற்றிய அவர் தீக்குச்சியைக்கிழித்து உடலில் பற்ற வைத்துக் கொண்டார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சாலையில் சென்றவர்கள், உடனடியாகச் செயல்பட்டு தீயை அணைத்துஅப்பெண்ணை மீட்டனர்.
பயங்கர தீக்காயத்துடன் இருந்த அந்தப் பெண்ணை நுங்கம்பாக்கம் போலீஸார் கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-->












Click it and Unblock the Notifications