பாகிஸ்தானே காரணம்: அத்வானி
காந்திநகர்:
ஜம்மூ-காஷ்மீரில் தேர்தல்கள் அமைதியாக நடந்து வருவதால் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைக்கு சர்வதேச அளவில்அங்கீகாரம் கிடைத்து வருகிறது. இதை விரும்பாத பாகிஸ்தான் தான் குஜராத் கோவில் தாக்குதலை திட்டமிட்டு நடத்தியுள்ளதுஎன துணைப் பிரதமர் அத்வானி கூறினார்.
கோவிலின் வெளியே இன்று காலை நிருபர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுவிட்டதோல்வியின் எதிரொலி தான் இது. இது போல மேலும் பல தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தலாம். நாம் தொடர்ந்துஎச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சில பக்தர்களை பிடித்து வைத்துக் கொண்டு அரசுக்கு நிபந்தனை விதிக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். இதை நமது வீரர்கள்முறியடித்துவிட்டனர். இந்தத் தாக்குதல் காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கு எதிராகவும் நடந்ததாக்குதல்.
கோவிலுக்கு எந்தச் சேதமும் இல்லாமல் தீவிரவாதிகளை படையினர் சுட்டுக் கொன்றனர். குஜராத் மதக் கலவரம் குறித்துபாகிஸ்தான் அதிபர் ஐக்கிய நாட்டு சபையில் பேசினார். இப்போது இந்த குஜராத் கோவில் தாக்குதல் நடந்துள்ளது. இதனால்இதில் பாகிஸ்தானின் கை இருப்பது மிக நிச்சயம்.
இந்தத் தாக்குதலை வைத்து மீண்டும் குஜராத்தில் மதக் கலவரத்தைத் தூண்ட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. ஆனால்,இந்துக்களும் முஸ்லீம்களும் அமைதியாக இருந்து அந்தத் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்றார்.
-->












Click it and Unblock the Notifications