உலக நாடுகள் கண்டனம்
காந்திநகர்:
குஜராத் சுவாமி நாராயணன் கோவிலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை பல்வேறு உலக நாடுகளும்கடுமையாகக் கண்டித்துள்ளன.
தாக்குதல் குறித்துக் கேள்விப்பட்டதும் அமெரிக்க மக்களாகிய நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். இந்தக்கோடூரமான தாக்குதலை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது என்று அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ் கூறினார்.
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை அமெரிக்க மக்கள் சார்பாகத்தெரிவிப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான ரிச்சர்ட் பவுச்சர் கூறினார்.
அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்திய முஸ்லீம்களும் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.வழிபாட்டு தலத்தில் நுழைந்து தாக்குதல் நடத்துவதை முஸ்லீம் உள்பட எந்த மதமுமே ஏற்றுக் கொள்ளாது என்றுகூறிய அவர்கள், குஜராத் மக்கள் அமைதியுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இதே போல் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சரான ஜாக் ஸ்டிராவும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம்தெரிவித்துள்ளார். மதவாத தீவிரவாதத்தின் மூலம் எப்போதுமே வன்முறைக்குத் தீர்வு காண முடியாது என்று அவர்கூறினார்.
காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதத்தைத் தூண்டி வரும் பாகிஸ்தானும் கூட இந்தத் தீவிரவாதத் தாக்குதலைக்கண்டித்துள்ளது. கோவிலில் தாக்குதல் நடத்தியிருப்பது கொடூரமானது என்று அந்நாட்டு வெறியுறவுத்துறைஅமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.
இது போலவே வேறு பல உலக நாடுகளும் குஜராத் கோவிலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதைக்கண்டித்துள்ளன.
இதற்கிடையே, இந்தத் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து வன்முறை எதுவும் ஏற்படாமல் அம்மாநில மக்களைக்காப்பாற்ற வேண்டும் என்று இந்திய அரசை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டிஇன்டர்நேஷனல் கேட்டுக் கொண்டுள்ளது.
மோடியின் யாத்திரை ஒத்திவைப்பு:
இந் நிலையில் கடந்த சில வாரங்களாக மாநில முதல்வர் நரேந்திர மோடி நடத்தி வந்த கெளரவ் யாத்திரை தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
தேர்தலை ஒட்டி இந்த யாத்திரையை நடத்தி வந்தார் மோடி.
-->












Click it and Unblock the Notifications