மாறனுக்கு இன்று அவசர அறுவை சிகிச்சை
சென்னை:
மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு இன்று இரவு அவசர இருதய அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.
கடந்த ஜூலை 22ம் தேதி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு இருதயத்தில் செயற்கை வால்வுபொருத்தும் அறுவை சிகிச்சை நடந்தது.
இதையடுத்து வழக்கமான சோதனைக்காக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சமீபத்தில்சேர்க்கப்பட்டார். சோதனையின் போது இருதயத்தில் செயற்கையாகப் பொருத்தப்பட்ட வால்வை பூஞ்சைதாக்கியுள்ளது (Fungal infection)தெரியவந்தது.
இதையடுத்து அவர் தொடர்ந்து மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டார். டெல்லி அப்பல்லோவில் அவருக்குசிகிச்சை அளித்த இருதய அறுவைச் சிகிச்சை டாக்டர் எம்.ஆர். கிரிநாத் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் இன்றுகாலை சென்னை வந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
மேலும் மற்றொரு அவசர அறுவைச் சிகிச்சை மூலம் பூஞ்சையால் தாக்கப்பட்ட வால்வை மாற்றவும் அந்தடாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து இன்று இரவு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடத்தப்படுகிறது.
-->












Click it and Unblock the Notifications