காவிரி: அரசியல் சட்டத்தை மீறுகிறது கர்நாடகம்- வைகோ
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
காவிரிப் பிரச்சினையில் அரசியல் சட்டத்தை மீறும் வகையில் கர்நாடக அரசு நடந்து கொள்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.
கடந்த 1984ம் ஆண்டு மயிலாடுதுறையில் அதிமுகவினர் தாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வைகோ,நேற்று மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவரை மீண்டும் அடுத்த மாதம் 8ம் தேதி ஆஜர்படுத்துமாறு நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார்.
பின்னர் வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காவிரிப் பிரசிசனையில் கர்நாடக அரசு நடந்து கொள்ளும் விதம் அரசியல் சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளது.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் விதமான இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு மிகவும்எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
-->












Click it and Unblock the Notifications