கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தைத் தடுக்க வீரமணி கோரிக்கை
சென்னை:
காவிரி கர்நாடகத்திற்குத்தான் சொந்தம் என்று கர்நாடகம் கூறுமானல், நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகத்திற்குவழங்குவதை தடுக்க வேண்டும் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி. வீரமணி கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் வீரமணி பேசுகையில்,
காவிரி ஆறு குடகு மலையில் உற்பத்தியாவதால் அது கர்நாடகத்திற்குத்தான் சொந்தம் என்று கர்நாடகம் கூறிவருகிறது.
அப்படி அவர்கள் தொடர்ந்து கூறி வந்தால், நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கர்நாடகத்திற்குவழங்குவதை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மின்சாரம் தருவதை தமிழகம்நிறுத்தினால் அதை கர்நாடகம் தங்காது.
தமிழர்களின் பெருந்தன்மையுடனும் பொருமையுடனும் கர்நாடகம் அரசியல் விளையாட்டு நடத்தி வருகிறது. இதுஅந்த மாநிலத்துக்கு நல்லதல்ல.
முதல்வர் பதவியில் ஜெயலலிதா நீடிக்கும் வரை காவிரிப் பிரச்சினையை தீர்க்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர்அனில் சாஸ்திரி கூறியுள்ளது கடுமையாக கண்டிக்கத்தக்கது. பிரச்சினையின் ஆழம் தெரியாமலேயே கருத்தைக்கூறியுள்ளது அதிகபிரசிங்கித்தனமானது.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக திராவிடர் கழகம் சார்பில் விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்என்றார் வீரமணி.
-->












Click it and Unblock the Notifications