நிறுத்திவைக்கப்பட்ட பெண் காவலர் தேர்வு மீண்டும் தொடங்கியது
சென்னை:
தமிழகம் முழுவதிலும் சமீபத்தில் நிறுத்திவைக்கப்பட்ட பெண் காவலர் தேர்வு இன்று மீண்டும் தொடங்கியது.
தமிழக காவல் நிலையங்களில் காலியாக உள்ள 2,000 பெண் காவலர் பணியிடங்களுக்கு சமீபத்தில் தேர்வுநடந்தது.
அப்போது உடல் திறன் போட்டிகளில் கலந்து கொண்ட பெண்கள் மயங்கி விழுந்தனர். கடுமையான விதிமுறைகள்காரணமாக அவர்கள் மயங்கி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பெண் காவலர் தேர்வும் உடனடியாகநிறுத்திவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா விதிமுறைகளில் மாற்றம் செய்தார். இதையடுத்து மீண்டும் இன்று உடல்திறன் தேர்வு தமிழகம் முழுவதிலும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
செங்கை கிழக்கு மாவட்டத்தில் நடந்த உடல் திறன் தேர்வில் 1,200 பெண்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்குசான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் ஓட்டப் பந்தயப் போட்டி நடந்தது. சரக டி.ஐ.ஜியான ஜாங்கிட் இந்தத் தேர்வைதுவக்கி வைத்தார்.
-->












Click it and Unblock the Notifications