Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அணைகளில் நீர்மட்டம் குறைவு: நெல்லை விவசாயிகள் கவலை

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

திருநெல்வேலி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும்பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய மூன்று முக்கிய அணைகள் உள்ளன.இங்கிருந்துதான் மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் குடிநீர் விநயோகம் செய்யப்படுகிறது.லட்சக்கணக்கான ஏக்கர் பாசனத்திற்கு விவசாயமும் நடைபெறுகிறது.

பாபநாசம் அணையின் கொள்ளளவு 143 அடியாகும். ஆனால் அணையில் தற்போது 38 அடி தண்ணீர் தான்இருப்பு உள்ளது.

சேர்வலாறு அணையில் 165 அடிக்கு நீரை சேமித்து வைக்க முடியும். ஆனால் இப்போதோ வெறும் 51 அடிதண்ணீர் தான் உள்ளது.

மணிமுத்தாறு அணையிலும் இதே கதை தான். மொத்தக் கொள்ளளவு 118 அடியாகும். ஆனால் நீர் இருப்போ 42அடி மட்டுமே.

இப்படி அணைகளில் நீர்மட்டம் மிக மோசமாக இருப்பதால் பொதுமக்கள் குடிநீர் பஞ்சம் வந்து விடுமோ என்றுபயத்தில் உள்ளனர். விவசாயம் பாதிக்குமோ என்று விவசாயிகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

விரைவில் மழை பெய்யாவிட்டால் நிலைமை மோசமாகி விடும் என்ற பயம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.இதையடுத்து வடகிழக்குப் பருவமழை எப்போதடா பெய்யும் என்று அவர்கள்எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+