குஜராத் படுகொலை: "வக்ப்" வாரியம் கடும் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குஜராத்தில் சுவாமி நாராயணன் கோவிலில் நடந்த படுகொலைச் சம்பவங்களுக்கு தமிழ்நாடு வக்ப் வாரியம் கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத் கொடூரம் தொடர்பாக பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு வக்ப் வாரியமும் இந்தப் படுகொலைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதுதொடர்பாக வக்ப் வாரியம் நடத்திய சிறப்புக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் இந்த நெருக்கடியான நேரத்தில் அமைதி காக்க வேண்டும் என்றும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்குஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-->












Click it and Unblock the Notifications