நாங்கள் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்: சோ.பா
சென்னை:
நானும், இளங்கோவனும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்பட்டு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைவளர்ப்போம் என்று புதிய தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறினார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சோ.பாலகிருஷ்ணனும், செயல் தலைவர்இளங்கோவனும் டெல்லியில் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனைகள் நடத்தி விட்டு இன்றுசென்னை திரும்பினர்.
விமான நிலையத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களை வரவேற்றனர். பின்னர் கத்திப்பாராசந்திப்பில் உள்ள நேரு மற்றும் ராஜீவ் காந்தி சிலைகளுக்கு இரு தலைவர்களும் மாலை அணிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சோ.பா பேசுகையில், நானும், இளங்கோவனும் தனித்தனி இல்லை. இருவரும்இரட்டைக் குழல்துப்பாக்கி போல இணைந்து செயல்பட்டு கட்சியை வளர்ப்போம்.
இதுவரை தமிழகத்தில் இளங்கோவன் என்னவெல்லாம் செய்து கொண்டிருந்தாரோ அதை இனி நாங்கள்இருவரும் இணைந்து செய்வோம்.
அதிமுக ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். அதில் மாற்றமே இருக்காது. இது ஒருதொடர்போராட்டமாகும் என்றார்.
இளங்கோவன் பேசுகையில், காங்கிரஸை பலமுள்ள கட்சியாக மாற்றுவதே எங்களது திட்டம். ஒருங்கிணைந்துசெயல்படுவோம்.
தமிழக காங்கிரஸ் நிர்வாகக் குழு மாற்றப்படலாம். சட்டமன்ற காங்கிரஸ் தலைவரை கட்சித் தலைவர் சோனியாகாந்தி விரைவில் அறிவிப்பார் என்றார்.
-->












Click it and Unblock the Notifications