சேலம் வாலிபர் கொலையில் பூசாரி கைது: புளு பிலிம்கள் சிக்கின
சேலம்:
சேலம் அருகே உள்ள அழகாபுரம் காட்டூர் பகுதியில் செல்வம் என்ற வாலிபர் படுகொலை செய்து புதைக்கப்பட்டதுதொடர்பாக சதாசிவம் என்ற பூசாரியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சேலம் அழகாபுர் காட்டூரைச் சேர்ந்த செல்வம் என்ற பட்டறை உரிமையாளர் படுகொலை செய்யப்பட்டு ரஜினிஎன்பவருக்குச் சொந்தமான நிலத்தில் புதைக்கப்பட்டிருந்தார். அவர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றுகூறப்பட்டது.
ஆனால், இது தொடர்பாக நடந்த விசாரணையில் இது முன் விரோதம் காரணமாக நடந்த கொலை என்றுதெரியவந்தது.
இதையடுத்து ரஜினியின் உறவினரரும் பூசாரியுமான சதாசிவமும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை தொடர்பாக செல்வத்திடம் வேலை பார்த்த சீனிவாசன் என்பர் உள்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சதாசிவத்துக்கும் இந்தக் கொலையில் தொடர்புஇருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் தீவிரமாகத் தேடி சதாசிவத்தை சேலத்தில் வைத்துக் கைது செய்தனர்.
ரஜினிக்கும், செல்வத்திற்கும் சீட்டு விளையாடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் செல்வத்தைரஜினியும் மேலும் சிலரும் சேர்ந்து கொலை செய்து புதைத்த விட்டதாக சதாசிவம் போலீசாரிடம் தெரிவித்தார்.
தலைமறைவாக உள்ள ரஜினி மற்றும் அவரது கூட்டாளிகளை சேலம் பேர்லேன்ட்ஸ் போலீஸார் தொடர்ந்து தேடிவருகின்றனர்.
இந் நிலையில் செல்வத்தின் உடல் புதைக்கப்பட்டிருந்த ரஜினியின் நிலத்தை ஒட்டி பழைய மிகப் பெரிய வீடுஉள்ளது. இதுவும் ரஜினிக்கே சொந்தமானது.
இந்த வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியதில் பல புளு பிலம் கேசட்டுகள் சிக்கின. இவை இந்த வீட்டிலேயேஎடுக்கப்பட்டுள்ளன. இதில் பல லோக்கல் கல்லூரி மாணவிகளும் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிலகேசட்டுகளில் மாணவிகள் மிரட்டி கற்பழிக்கப்படுவதும் படமாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலைக்கும் புளு பிலிம்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற ரீதியிலும் விசாரணை நடந்துவருகிறது.
இந்த வீட்டுக்கு பல இளம் பெண்கள் வந்து சென்றுள்ளதை அப் பகுதி மக்கள் உறுதி செய்துள்ளனர்.
முதலில் நரபலியாக வெளிவந்த செய்தி பின்னர் முன் விரோதக் கொலையானது. இப்போது புளு பிலிம்களும்சேர்ந்து இந்த விவகாரத்தை மேலும் மர்மமாக்கியுள்ளன.
-->












Click it and Unblock the Notifications