மர வியாபாரியாக வந்த இமாம் அலி
பெங்களூர்:
திருமங்கலத்தில் போலீசாரின் பிடியிலிருந்து தப்பித்த அல்-உம்மா தீவிரவாதியான இமாம் அலி, தான்கேரளாவிலிருந்து வந்துள்ள ஒரு மர வியாபாரி என்று கூறித் தான் பெங்களூரில் வீடு வாடகைக்கு எடுத்தான்.
இது குறித்து அந்த வீட்டின் உரிமையாளர் கூறுகையில்,
தன் பெயர் ரவி என்று கூறிக் கொண்டு தான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அவன் (இமாம் அலி) வந்துஎன்னிடம் வீடு வாடகைக்கு வேண்டுமென்று கேட்டான்.
கேரளாவில் மர வியாபாரம் செய்து வருவதாகவும் பெங்களூரில் அதன் மொத்த விற்பனைக் கடையைவைத்துள்ளதாகவும் அவன் கூறினான்.
பின்னர் ரூ.35,000 அட்வான்சாகக் கொடுத்து வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டான். மாதா மாதம்வாடகையாக ரூ.3,000 தர வேண்டும் என்றும் நான் அவனிடம் கூறினேன்.
அதன் பின்னர் அந்த வீட்டில் இருந்த இவர்கள் (இமாம் அலியும் மற்ற நால்வரும்) அனைவரும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்றே எனக்குத் தெரியாது.
அவர்கள் நிறையத் தண்ணீரை செலவழித்தால், இனிமேல் தண்ணீர் தர முடியாது என்று கூறி அந்த வீட்டுக்குச்செல்லும் தண்ணீர் சப்ளையை நான் நிறுத்திவிட்டேன். இதையடுத்து அவர்கள் நாளை (செப்டம்பர் 30ம் தேதி)வீட்டைக் காலி செய்யப் போவதாகக் கூறினார்கள் என்றார் அந்த வீட்டின் உரிமையாளர்.
இந்நிலையில் தான் நேற்று ஒரு பெங்களூர் போலீஸ்காரரும் பெண் போலீஸ்காரரும் ஒரு தம்பதியைப் போலச்சென்று புதிதாக வாடகை வீடு தேடுபவர்கள் போல நடித்து வீட்டை நோட்டமிட்டுள்ளனர்.
மதுரை போலீசார் கொடுத்த ஒரு க்ளூவின் அடிப்படையில் கடந்த சில மாதங்களாகவே இந்த வீட்டைப் போலீசார்நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.
நேற்று அந்த வீட்டில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு போட்டோவில் இமாம் அலி உள்ளிட்ட சிலர் இருந்ததைப்பார்த்த ரகசியப் போலீசார் இருவரும் இதுகுறித்து உடனடியாக பெங்களூர் போலீஸ் அதிகாரிகளுக்குத் தகவல்கொடுத்தனர்.
இதையடுத்து தான் தமிழகத்தின் 25 கமாண்டோ பிரிவு போலீசாரும் பெங்களூர் போலீசாரும் கூட்டாகநடவடிக்கை மேற்கொண்டு இன்று அதிகாலை அந்த வீட்டைச் சுற்றி வளைத்து, இமாம் அலி உள்ளிட்டதீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றனர்.
இதற்கிடையே இமாம் அலி தங்கியிருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுகையில்,
அந்த வீட்டிற்கு அவர்கள் வந்ததிலிருந்தே அவர்கள் அவ்வளவாக வெளியே வருவதே இல்லை.
அவர்களில் ஒரு பெண்ணும் இருந்தாள் என்பது இன்றைக்குத் தான் எங்களுக்குத் தெரிய வந்தது என்று அவர்கள்கூறினர்.
இதற்கிடையே பெங்களூரில் இமாம் அலி கும்பல் ஆறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததாகவும், நேற்றுகூட அவன் ஒரு கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் பெங்களூர் போலீஸ் கமிஷனரான சங்கிலியானாதெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் உள்ள பல இந்துக் கோவில்களைக் குண்டு வைத்துத் தகர்க்கவும் இமாம் அலி தயாராகிவந்ததாகவும் அவர் கூறினார்.
இமாம் அலியைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசளிக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவேஅறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications