""ஒழுங்கா பேச்சு நடத்தத் தெரியவில்லை"": ஜெ.க்கு கருணாநிதி குட்டு
சென்னை:
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒழுங்காகப் பேச்சுவார்த்தைநடத்தியிருந்தால் பிரச்சனை இந்த அளவுக்குப் போயிருக்காது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில்நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
காவிரிப் பிரச்சனையில் ஜெயலலிதா தொடர்ந்து தவறான அணுகுமுறையையே கையாண்டு வருகிறார்.
தேவையற்ற வார்த்தைகளைக் கொட்டுவதால் அண்டை மாநிலமான கர்நாடகத்துடன் கசப்பான உறவுகளைத் தான்அவர் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.
இதையெல்லாம் தவிர்த்துவிட்டு ஒழுங்கான முறையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், காவிரிப் பிரச்சனையைத்தமிழக அரசு எப்போதோ தீர்த்திருக்கலாம்.
இப்போதும் இந்தப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு. இரு மாநில முதல்வர்களும் பேச்சு நடத்திகாவிரிப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே கர்நாடக அரசு மீறும் போது நாம்வேறு என்ன தான் செய்வது?
காவிரி விவகாரம் தொடர்பாக திமுக விரைவில் அறவழியில் போராட்டம் நடத்தும். இதற்கான அறிவிப்பும்விரைவில் வெளியிடப்படும் என்றார் கருணாநிதி.
-->












Click it and Unblock the Notifications