இமாம் அலிக்காக நடந்த சிறப்பு தொழுகை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலி உள்ளிட்ட 5 தீவிரவாதிகளின் ஆத்மா சாந்தி அடைவதற்காகநேற்று பெங்களூரில் சிறப்புத் தொழுகை நடந்ததாகத் தெரிய வந்துள்ளது.
பெங்களூரில் உள்ள தேவர்ஜுவனஹள்ளியில் ஒரு மசூதியில் இந்தச் சிறப்புத் தொழுகை நடந்ததாகப்போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்தவர் குறித்தும், அதில் பங்கேற்றவர்கள் குறித்தும் போலீசார்ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இமாம் அலியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து மதுரையில் உள்ள தெற்கு வாசல் பகுதியில்கருப்புக் கொடி ஏற்ற முயன்ற தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
அதேபோல இமாம் அலி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அங்கு வைக்கப்பட்டிருந்ததட்டியையும் போலீஸார் அகற்றினர்.
-->












Click it and Unblock the Notifications