கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பளம் "கட்": அரசு எச்சரிக்கை
சென்னை:
வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களுக்கு பணிக்கு வராத நாட்களில் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்றுதமிழக அரசு எச்சரித்துள்ளது.
பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகளை இணைப்பதைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள 67 அரசுக்கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கடந்த 8ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்குதித்துள்ளனர்.
இது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் போராட்டம் நியாயமற்றது. உடனடியாக போராட்டத்தைக் கைவிட்டு விட்டுவேலைக்குத் திரும்ப வேண்டும்.
இல்லாவிட்டால் அவர்கள் பணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது.
ஆசிரியர்கள் போராட்டம் முழு அளவில் இல்லை. பெரும்பாலான அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் பணிக்குவந்திருந்தனர்.
பல கல்லூரிகளில் மாணவர்களும் வந்திருந்தனர். வழக்கம் போல வகுப்புகள் நடந்தன என்று அவ்வறிக்கையில்கூறப்பட்டுள்ளது.